முகநூல் அல்லது முகபுத்தகம் இன்றைய தேதியில் ஒரு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. மக்களின் கற்பனை வளத்தை தூண்டும் வகையில் பெரிதாக முகநூளில் ஒன்றும் இல்லை என்றாலும் பத்தில் ஒன்பது பேர் முகநூல் கணக்கு வைத்துக்கொண்டு உள்ளனர். சில சமயம் மக்கள் அதை பயன் படுத்தும் விதத்தை பார்க்கும் பொது வெறுப்பாகவும் வேதனையாகவும் உள்ளது. சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தைகளை படம் பிடித்து போடுவதும், உடல் ஊனமுற்றவர்களின் பேட்டி போடுவதும், வயதில் மூத்தவர்களின் புகைப்படங்களை போட்டு "லைக்" கேட்பதும் மிக வேதனைக்குரிய செயல்கள்.